|
முஷிக வாகன மோதக ஹஸ்த ஷ்யாமள கர்ண விளம்பித ருத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே ஐந்து கரத்தனை ஆனைமகத்தனை இந்தியினிளம்பிறை போலுமெயிற்றனை நந்தி மகந்தனை ஞானக்கொழுந்தனை புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வண்ண மருங்கில் வளர்ந்தழ கெரிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்கு செந்தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நாலிரு சுரமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்ட முப்புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த தரிய மெய்ஞான அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே முப்பழம் நுகரும் முஷிக வாக இப்பொழுதென்னை ஆட்கொள வேண்டி தாயா யெனக்குத் தானெழுந்தருளி மாயாப் பிறவி மயக்கமறுத்தே திருந்திய முதல் ஐந்தெழுத்துத் தெளிவாய் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகந்து குருவடிவாகி குவலயத்தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடாவகைதான் மகிழ்ந்தெனக் கருளி கோடாயுதத் தாற் கொடுவினை களைந்தே
|
விநாயகர் துதி |
|
வெள்ளி, 14 செப்டம்பர் 2007( 16:43 IST ) |
|
|
|
| |
|
|
உவட்டா உபதேசம் புகட்டி யென்செவியில் தெவிட்டாத ஞானத்தெளிவையுங்காட்டி ஐம்புலன் தன்னை அடக்குமுபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கருளி கருவிகள் ஒடுங்குங் கருத்தினையறிவித்து இருவினை தன்னை யறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக்கருளி மலமொரு மூன்றின் மயக்கமறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி ஆறதாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடபிங் கலையின் எழுத்தறி வித்தே கடையிற் சுழுமுனை கபாலமுங்காட்டி மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவிலுரைத்து குண்டலி யதனின் கூடிய சபையில் விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் முண்டெழு கனலை காலாலெழுப்புங் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தனியக்கமும் குமுத சகாயங் குணத்தையுங்கூறி இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையுங்காட்டி சண்முக தூலமும் சதுர்முக தூட்சமும் எண்முகமாக இனிதெனக் கருளி புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தரிசனப்படுத்தி கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக்கருளி என்னையறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைகளைந்தே வாக்கு மனமும் இல்லா மனோலயந் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி யிரண்டின் கொன்றிடமென்ன அருள் தருமானந்தத்தை யழுத்தியென் செவியில் எல்லையில்லா ஆனந்தமளித்து அல்லல் களைந்து அருள்வழிகாட்டி சத்தத்தினுள்ளே சதாசிவங்காட்டி சித்தத்தினுள்ளே சிவலிங்கங்காட்டி அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்தி கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக்கரத்தின் நிலையறிவித்து தத்துவ நிலiயைத் தந்தெனையாண்ட வித்தக விநாயக விரள்கரண் சரணே. |
|
|
|
|
|
|
|
No comments:
Post a Comment